உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 16 மீனவர்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு; காரணம் இதுதான் | Rameshwaram Fisherman | Mannar Court

16 மீனவர்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு; காரணம் இதுதான் | Rameshwaram Fisherman | Mannar Court

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மீன்பிடிக்க சென்ற 24 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூலையில் கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள் தொடர்பான வழக்கு மன்னார் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒரு சில மீனவர்களின் ரேகைகள் ஒத்து போகாததால், அதை ஆய்வு செய்வதற்காக அவர்களின் கோர்ட் காவல் 29ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது. ஜூன் 28 ல் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் மீதான வழக்கும் விசாரணைக்கு வந்தது. ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கும் தலா 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தினால் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. வயிற்று பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்றவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்தால் எப்படி கட்ட முடியும் என மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி