உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கத்தியை காட்டிய கொள்ளையர்: துணிச்சல் காட்டி விரட்டிய மனைவி robbery attempt vaniyambadi husband wif

கத்தியை காட்டிய கொள்ளையர்: துணிச்சல் காட்டி விரட்டிய மனைவி robbery attempt vaniyambadi husband wif

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீலிகொல்லை, புதுதெருவைச் சேர்ந்தவர் இம்தியாஸ். தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர்களது பிள்ளைகள் படித்து விட்டு வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டனர். இம்தியாஸ், அவரது மனைவி சபீதா குல்சும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டில் சக்திவேல் என்ற வாலிபர் வேலை பார்த்து வருகிறார். இன்று சக்திவேலை பொருட்கள் வாங்கி வருவதற்காக சபீதா கடைக்கு அனுப்பினார். கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சக்திவேல் கதவை தட்டினார். சபீதா கதவை திறந்ததும் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் பின்னாலேயே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். கத்தி, அரிவாளை காட்டி இம்தியாஸ், சபீதாவை மிரட்டினர். இம்தியாஸ் மற்றும் சக்திவேலை சேரில் கட்டி போட்டனர். வாயில் டேப்பை ஒட்டினர். பிறகு, நகைகள், பணத்தை கொள்ளை அடிப்பதற்காக பீரோக்களை திறந்துகாட்டும்படி சபீதாவை மிரட்டினர்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை