உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்கம் முக்கிய தீர்மானம் | 3 Teachers arrested | Krishnagiri advocate

கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்கம் முக்கிய தீர்மானம் | 3 Teachers arrested | Krishnagiri advocate

மாணவியை சீரழித்த ஆசிரியர்கள் வழக்கறிஞர் சங்கம் அதிரடி முடிவு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு பள்ளியின் 8ம் வகுப்பு மாணவியை ஆசிரியர்கள் 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவியை சீரழித்த ஆசிரியர்கள் சின்னசாமி வயது 57, ஆறுமுகம் வயது 45, பிரகாஷ் வயது 37 ஆகியோரை பர்கூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சூழலில் கைது செய்யப்பட்ட 3 ஆசிரியர்களுக்காக வாதாடப்போவதில்லை என கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக யாரும் ஆஜராக கூடாது; ஜாமின் மனு தாக்கல் செய்ய கூடாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை