/ தினமலர் டிவி
/ பொது
/ மனித ரத்தத்தில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் Sniffer dogs| wayanad rescue operation
மனித ரத்தத்தில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் Sniffer dogs| wayanad rescue operation
கேரளா வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 300 ஐ தாண்டிவிட்டது. இன்னும் பலரை கண்டுபிடிக்க முடியவில்லை. மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு என்பதால், அடிவாரத்தில் இருந்த பல வீடுகள் மண்ணில் புதைந்தன. தூக்கத்தில் இருந்த பலர் உயிரோடு அடித்து செல்லப்பட்டு புதைந்தனர். 4வது நாளாக மீட்பு பணிகள் நடக்கிறது. புதைந்து இறந்தவர்கள் சடலங்களை தேடி கண்டுபிடித்து எடுப்பது மீட்பு குழுவினருக்கு பெரும் சவாலான வேலையாக இருக்கிறது. எங்கேனும் சடலங்கள் புதைந்துள்ளதா என்பதை அறிய ஒரு குழுவினர் ஒவ்வொரு இடத்திலும் சேறு சகதியை கிளறி தேடி வருகின்றனர்.
ஆக 02, 2024