உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காப்பர் உற்பத்தி இனி சூப்பர்: இன்ப அதிர்ச்சி தரும் ஸ்டெர்லைட் | Sterlite Reopening | Thoothukudi

காப்பர் உற்பத்தி இனி சூப்பர்: இன்ப அதிர்ச்சி தரும் ஸ்டெர்லைட் | Sterlite Reopening | Thoothukudi

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 2018ல் நடந்த மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதந்தா சுப்ரீம் கோர்ட் வரை சென்ற போதிலும் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இதற்கிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் கிரீன் காப்பர் உற்பத்தி செய்ய அனுமதி கோரி ஜனவரி 9ம் தேதி வேதாந்தா விண்ணப்பித்து இருந்தது. ஜனவரி 27ம் தேதி அந்த விண்ணப்பத்தைத் தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பிப்ரவரி 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. தற்போதைய சூழலில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கிரீன் காப்பர் உற்பத்தி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகிறது. கிரீன் காப்பர் என்றால் குறைந்த அளவு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, குறைந்த கார்பன் எமிஷனோடு தயாரிக்கப்படும் காப்பராகும். வேதாந்தா நிறுவனத்தின் இந்த முயற்சியை ஸ்டெர்லைட் ஆதரவு இயக்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

பிப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை