SC-ST உள்ஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு Supreme Court | 7 Judge Constitutional Bench
அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள அதிகாரங்களின்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்த இடஒதுக்கீட்டில் தமிழகம், பஞ்சாப், மாநிலங்கள் உள் ஒதுக்கீடுகளை வழங்கும் சட்டங்களை இயற்றின. தமிழகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ள அருந்ததி இன மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2009ல் கொண்டுவரப்பட்டது. பஞ்சாப் மாநிலத்திலும் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் இருந்து சில சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 2005ம் ஆண்டு, 5 பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது. எஸ்.சி.-எஸ்.டி. இடஒதுக்கீடுகளில் இருந்து, மற்ற சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என தீர்ப்பு வழங்கியது.