/ தினமலர் டிவி
/ பொது
/ கள்ளக்குறிச்சி வழக்கில் தமிழக அரசின் அப்பீல் டிஸ்மிஸ் | Supreme Court | Kallakurichi Case
கள்ளக்குறிச்சி வழக்கில் தமிழக அரசின் அப்பீல் டிஸ்மிஸ் | Supreme Court | Kallakurichi Case
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் சாராயம் குடித்து 69 பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அதிமுக வக்கீல் இன்பதுரை, பாமக செய்தி தொடர்பாளர் பாலு, பாஜ வக்கீல் மோகன்தாஸ், தேமுதிகவின் பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு போட்டிருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் செல்வம், மணி, பாலு ஆகியோர் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
டிச 17, 2024