/ தினமலர் டிவி
/ பொது
/ 4வது வழக்கில் கோவை டான்பிட் கோர்ட் உத்தரவு! | Susi Emu Farms | Emu Scams | Coimbatore Court
4வது வழக்கில் கோவை டான்பிட் கோர்ட் உத்தரவு! | Susi Emu Farms | Emu Scams | Coimbatore Court
ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவர் குருசாமி. இவர் 2010ல் சுசி ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஈரோடு பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது சுசி ஈமு கோழிபண்ணை. இதன் கிளை நிறுவனம் ஒன்று கோவை பொள்ளாச்சியில் இயங்கியது. 1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி குஞ்சுகள், தீவனம், கொட்டகை அமைத்து, பராமரிப்பு தொகையாக ஒன்றரை ஆண்டுகளுககு மாதம் 6 ஆயிரம், ஆண்டு போனஸாக 20 ஆயிரம், அளிக்கப்படும், 1.5 ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் என கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தினர். இதில் மோசடி நடந்ததாக பலரும் புகார் அளித்தனர்.
ஜன 29, 2025