நாடு கடத்தப்படும் தஹாவூர் ஹூசைன் | Tahawwur Hussain Rana | Mumbai Attack
உலகையே உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் 2008 நவம்பரில் நடந்தது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் எட்டு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடக்கம். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குக்தலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான். பின்னர் தூக்கிலிடப்பட்டான். பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி தஹாவூர் ஹூசைன் ராணா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
டிச 19, 2024