அவசர சிகிச்சை அறையில் நடந்தது என்ன? வெளியான காட்சி | Theni Government Hospital
இறந்த பாட்டியை கூட விட்டு வைக்கல! அரசு ஆஸ்பிடல் உள்ளே நடந்த அதிர்ச்சி சிசிடிவியில் பகீர் தேனி, போடி அருகே உள்ள எஸ்.எஸ் புரத்தை சேர்ந்தவர் மூதாட்டி கமலம், வயது 82. உடல் நலக்குறைவால் ஆஸ்பிடலுக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார். போகும் வழியிலேயே சுயநினைவை இழந்தார். தேனி அரசு ஆஸ்பிடல் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டார். மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என கூறினர். அப்போது அவரது உறவினர்கள் டாக்டரை சந்திக்க போயிருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது மூதாட்டியின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க செயினை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கானாவிலக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிகிச்சை அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி அருகே சென்ற பெண் ஒருவர் தங்கசெயினை திருடி சென்றது தெளிவாக தெரிந்தது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண் யார் என விசாரணை நடத்தப்பட்டது. தேனி வளையப்பட்டியை சேர்ந்த நந்தினி என்பது தெரியவந்தது , தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் . அரசு ஆஸ்பிடல் அவசர சிகிச்சை பிரிவு அறையிலேயே திருட்டு நடந்திருப்பது நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.