உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாஜி அறங்காவலர் குழு தலைவர் கற்பூரம் ஏற்றி சபதம் | Tirupati Laddu Controversy | Tirupati laddu row |

மாஜி அறங்காவலர் குழு தலைவர் கற்பூரம் ஏற்றி சபதம் | Tirupati Laddu Controversy | Tirupati laddu row |

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சூழலில் இன்று திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி திருப்பதிக்கு வந்தார். ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நீராடி தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றினார். அப்போது முதல்வர் சந்திரபாபு கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். நான் தலைவராக இருந்தபோது நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு நான் தவறு செய்து இருந்தால் என் குடும்பமே அழிந்து போகட்டும் என ஆவேசமாக கூறினார்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை