திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவலம்! டீனிடம் புகார் | Tiruvarur Government Hospital | Lack of basi
திருவாரூர், மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலைவாணி. இவர் வயிற்று வலி காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் அவருக்கு மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்ற பரிந்துரை செய்தனர். அப்போது குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை காரணமாக கலைவாணியின் உறவினர் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி நின்றுள்ளார். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெறும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது அங்குள்ளவர்களுக்கு ஷாக் தந்தது. கலைவாணி தரப்பில் திருவாரூர் அரசு மருத்துவமனை டீனிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான போட்டோ பரவி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.