உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சங்ககிரி மலை அடிவாரத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் | Woman murder case| Gun shot | Salem

சங்ககிரி மலை அடிவாரத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் | Woman murder case| Gun shot | Salem

சேலம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி அடுத்த தீவட்டிப்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி. வயது 70. கடந்த 20ம் தேதி அங்குள்ள சின்னேரி காட்டில் மாடு மேய்க்க சென்றவர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி உமா மகேஸ்வரி ஆய்வு நடத்தினார். தொடர் விசாரணையில், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், குற்றவாளி கட்டிகாரனூரை சேர்ந்த 26 வயது நரேஷ்குமார் என்பதை கண்டுபிடித்தனர். அவனை தேடி வந்த நிலையில், சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மகுடஞ்சாவடி போலீசார், நரேஷை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது நரேஷ் போலீசாரை கத்தியால் தாக்கி உள்ளார். இதில் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன், கான்ஸ்டபிள் செல்வகுமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக கத்தியை போட்டு விட்டு சரணடையுமாறு கூறியும் கேட்காததால் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவனது வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். பின்னர் அவனை கைது செய்து சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கைதான நரேஷ் ஆடு மாடு மேய்க்கும் வயதான பெண்களையும், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளையும் குறிவைத்து கொடூரமாக தாக்கி கொள்ளையடிக்கும் வழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை