உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் சிசிடிவி: முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்| Young women misbehaving | Tirupur

திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் சிசிடிவி: முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்| Young women misbehaving | Tirupur

திருப்பூரில் பெரும் அளவில் வெளி மாவட்ட, வெளி மாநில மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப குற்ற சம்பவங்களும் அதிகம் நடக்கிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் வழிப்பறி அதிகம். அதிலும் இப்போது பாலியல் தொழில் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கும்பலாக நிற்கும் பெண்கள் இளைஞர்களை குறி வைத்து அழைக்கின்றனர். அவர்களிடம் சிக்கியவர்களிடம் மிரட்டி பணம் பறிப்பது வாடிக்கையாக உள்ளது. திருப்பூர் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ள கடை வாசல்களில் சர்வசாதாரணமாக அமர்ந்து பேரம் பேசுகின்றனர். அங்குள்ள சந்துகளில் பஸ் ஸ்டாண்ட் வரும் ஆண்களை அழைத்து வந்து எல்லை மீறுகின்றனர். இதனால் இந்த பகுதி வழியாக செல்லவே தயக்கமாக உள்ளது என அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Tiruppur #TiruppurNews #TNPolice #PublicSafety #CrimeNews #TamilNadu #Harassment #AlcoholAbuse #Misconduct

ஆக 29, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Chandramohan M.
செப் 03, 2025 17:15

காவல் துறைக்கும் பொறுப்பு உள்ளது மறுக்க இயலாது. அதே போல் பொது மக்களுக்கும் சமூகப் பொறுப்பு என்று ஒன்று இல்லையா? பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பொறுப்பில்லையா?


Sathiya Narayanan
செப் 01, 2025 08:01

டிஜிபி மை நியமிக்க முடியாமல் தவிக்கிறது அரசு. மக்கள் தொகை அதிகம் அதனால் குற்றம் அதிகம் என்பதை உ பி க்கும் பொருத்திப் பார்க்க திறணியற்றவர்கள். இந்த குற்றம் யார்வந்தாலும் நடக்கும் என்பார் பிளாஸ்டிக்சேர்காரர்


Kalyanaraman
ஆக 30, 2025 08:33

போலீசுக்கு தெரியாமலா இது நடக்கும்?? அவனுங்களுக்கு மாமூல் கொடுத்துட்டு என்ன செஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க.


Gnanavel S
ஆக 30, 2025 07:15

அனைத்தும் காவல்துறையினருக்கு தெரியும் அதனை தடுப்பதற்கு அவர்களுக்கு தெரியாது பொதுவாக ஒரு நாட்டில் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு சட்டம் வழிவகை செய்து தர வேண்டும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை