/ தினமலர் டிவி
/ பொது
/ இளைஞர்கள் வாழ்க்கையை புரட்டி போட்ட மது போதை | Youth Murdered | Drinkers Attack | Covai
இளைஞர்கள் வாழ்க்கையை புரட்டி போட்ட மது போதை | Youth Murdered | Drinkers Attack | Covai
கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த கூலி வேலை செய்யும் நண்பர்கள் ரகுபாண்டி, கரண், முத்துகிருஷ்ணன் 3 பேரும், காங்கேயம்பாளையம் தடுப்பணை பகுதியில் மது குடித்துள்ளனர். அதே ஊரை சேர்ந்த 23 வயது சுரேஷ் அங்கு வந்துள்ளார். மூவரும் மது குடிப்பதை பார்த்தும் அவருக்கும் மது குடிக்கும் ஆசை வந்தது. மது கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டுள்ளார். எங்களுக்கே இது பத்தாது எனக்கூறி சுரேஷை மூவரும் விரட்டி உள்ளனர். மது குடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருந்த சுரேஷ், அங்கிருந்த காலி மது பாட்டிலை எடுத்து உடைத்து ஆயுதமாக்கினார். மது தராவிட்டால் குத்திவிடுவேன் என்று மூவரையும் மிரட்டியுள்ளார்.
ஜூலை 30, 2025