உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விசாரணை கைதிகளை துன்புறுத்தக் கூடாது! | ADGP | TN Police

விசாரணை கைதிகளை துன்புறுத்தக் கூடாது! | ADGP | TN Police

போலீஸ் மீது எழும் தொடர் புகார்களை தொடர்ந்து 35 கட்டளைகளை பின்பற்ற சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டு உள்ளார். புகார்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். புகார் அளிக்க வருவோரிடம், பேப்பர் வாங்கவோ, அதிகாரி இல்லை என சொல்லி அலைக்கழிக்கவோ கூடாது. ஸ்டேஷனில் எப்போதும் போலீசார் இருக்க வேண்டும். முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசாரை நியமிப்பதை தவிர்க்க வேண்டும். சாலை மறியல், போராட்டம் போன்றவற்றில் தேவையின்றி லத்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி, குழந்தைகள் பெற்ற பெண் போலீசாருக்கு அவர்கள் கேட்கும் இடத்திற்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். விசாரணை கைதிகளை, தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. அனுபவம் இல்லாத போலீசாரை, சிறப்பு மற்றும் தனிப்படையில் அமர்த்தக் கூடாது. சிறப்பு மற்றும் தனிப்படை போலீசார், பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் விசாரிக்கக் கூடாது. ஒரு நபரை மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து விசாரிக்கக்கூடாது. லாக் அப் மரணம் மற்றும் வன்முறை இருக்கக் கூடாது குடும்பமாக செல்வோரிடம், வாகன சோதனை என்ற பெயரில் துன்புறுத்தல் கூடாது. காதல் மற்றும் கலப்பு திருமண விவகாரங்களில், போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்ய கூடாது என எச்சரித்து உள்ளார்.

ஜூலை 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஜூலை 03, 2025 15:24

சாதாரண பொது மக்களையே கடற்கரை போனற பொது இடங்களில் ஒருமையில் பேசி, அதட்டி, மிரட்டியடிக்கிறார்கள். இதுவும் ஒரு வகை துன்புறுத்தல்தான் சாமி. குற்றவாளிகளை பிடிக்க அதிகாரம் கொடுத்தால் காக்கிச்சட்டையை பயன்படுத்தி பணம் / பொருள் புடுங்குகின்றனர். செக்கிங் என்கிற பெயரில் உடலுறுப்பைகளை தொடுவதும், வண்டியில் கூட்டி அழைத்து அறைக்குள் காமத்தொல்லைகளையம் கொடுக்கின்றனர்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி