வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தி.மு.க. எவ்வளவு குறைவான தொகுதி கொடுத்தாலும் அதை ஒப்பு கொள்ள வேண்டிய (இக்கட்டான அரசியல்) நிலையில் தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. இருபத்தைந்து ஆண்டு காலமாக கட்சியை அப்படி தான் தமிழகத்தில் தலைவர்கள் நடத்தி வருகிறது. இதை நன்கு அறிந்ததால் தான் தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூட தங்களது ஆதரவு இல்லை யென்றால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் நுழையவே முடியாது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அணைவரையும் ஒட்டு மொத்தமாக அவமதிக்கும் கருத்தை துணிச்சலாகவும் தைரியமாகவும் கூறினார்கள். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்பதை எந்த கட்சியும் இவ்வளவு வெளிப்படையாக கூறியதில்லை. இதையும் மீறி தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க முடிவு செய்துள்ளது என்று சொன்னால் மரியாதை என்ற வார்த்தையை காங்கிரஸ் தனது அகராதியில் இருந்தே நீக்கி விட்டது என்று தான் கூற முடியும். இதை பற்றி கவலை படும் தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது.. திரு ப. சிதம்பரம் அவர்கள் கூட கடந்த காலத்தில் தி.மு.க. ஆதரவு இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவரே கூறிய வார்த்தைகள் இப்போது தி.மு.க.தலைவர்களால் உண்மையாக்க பட்டுள்ளது.. அதனால் தான் நஷ்டத்தில் லாபம் பார்க்க வழி தெரிந்த சிதம்பரம் அவர்களையே இறுதி பேச்சு வார்த்தை நடத்த கட்சி மேலிடம் கூறி தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்துள்ளது.