/ தினமலர் டிவி
/ அரசியல்
/ புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | Cyclone Fengal | Sea turbulence
புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | Cyclone Fengal | Sea turbulence
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை மையம் 3 நாட்களுக்கு முன்பே அறிவித்தது. இருப்பினும் 2 நாட்களாக போக்கு காட்டி வந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் பெஞ்சல் புயலாக மாறியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மதியம் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், வடகடலோர மாவட்டங்களில் கன மழை, அதிகன மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
நவ 29, 2024