உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மத்திய அரசு திடீர் உத்தரவு! காரணம் என்ன? | Jaffer Sadiq | DMK | Jaffer Sadiq Case | NCB

மத்திய அரசு திடீர் உத்தரவு! காரணம் என்ன? | Jaffer Sadiq | DMK | Jaffer Sadiq Case | NCB

ஜாபர் சாதிக் வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்! 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை என்சிபி துணை இயக்குநரான ஞானேஸ்வர் சிங் விசாரித்து வந்தார். இந்த சூழலில் ஞானேஸ்வர் சிங் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக் உள்ளிட்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வழக்குகள் மற்றும் என்சிபி துணை இயக்குநர் பதவியில் இருந்தும் ஞானேஸ்வர் சிங் திரும்பப் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாற்றம் குறித்த தகவல்கள் மத்திய அரசின் செய்திக்குறிப்பில் இடம்பெறவில்லை.

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ