தூங்கிய எம்பியை கிண்டலடித்த அமைச்சரால் சலசலப்பு | Opposision MP Slept during Minister's speech
Opposision MP Slept during Ministers speech at loksabha| Kiran Rijiju| லோக்சபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பற்றி சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார். எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது, கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்பி ஒருவர் அயர்ந்து துாங்கினார். இதை பார்த்த அமைச்சர்கள் ரிஜிஜு, கிரிராஜ் சிங் மற்றும் பாஜ எம்பிக்கள் பலமாக சிரித்தனர். அவர் துாங்கிவிட்டார்... துாங்கிவிட்டார் என கையை நீட்டி கிரிராஜ் சிங் கிண்டல் செய்தார். பார்லிமென்ட்டுக்கு வந்து தூங்கும் எம்பி இரவெல்லாம் என்ன செய்தார் என நான் கேட்கமாட்டேன் என கிரண் ரிஜிஜு கூறியதும் சபையில் பலத்த சிரிப்பலை எழுந்தது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். எம்பி இரவு முழுதும் புத்தகம் கூட படித்திருக்கலாம் என ரிஜிஜு கூறியதும் மேலும் சிரிப்பலை எழுந்தது.