சபாநாயகரை ஒருமையில் பேசி விமர்சித்த MLA: பரபரப்பு தகவல்கள் | Puducherry Assembly | Nehru mla suspend
சபாநாயகரை ஒருமையில் பேசிய எம்எல்ஏ தூக்கிச்சென்று வெளியேவிட்ட காவலர்கள் சட்டசபையில் பரபரப்பு புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று சபை கூடியதும் சபாநாயகர் செல்வம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சட்டசபை குழுக்களுக்கு தற்போதைய தலைவர்கள் உறுப்பினர்களே இந்த ஆண்டும் நீடிப்பார்கள் என சபாநாயகர் கூறினார். அப்போது உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேரு குறுக்கிட்டு பேசினார். குழு தலைவர்கள் உறுப்பினர்கள் பெயர் விபரத்தை தெரிவிக்க வேண்டும் என கோரினார். அதற்கு சபாநாயகர் செல்வம் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டவர்களே இந்த ஆண்டும் நீடிக்கின்றனர் என்றார். சட்டசபை உறுதிமொழிக்குழுவின் தலைவர் மாற்றப்பட்டது பற்றி அறிவிக்கவில்லையே என நேரு கேட்டார்.