உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிஜிபி அலுவலகம் முன் நடந்த தாக்குதல் சம்பவம் | Puratchi Tamilagam party | Moorthy | VCK | Thiruma

டிஜிபி அலுவலகம் முன் நடந்த தாக்குதல் சம்பவம் | Puratchi Tamilagam party | Moorthy | VCK | Thiruma

பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க ஸ்டாலின் மீது நேற்று கொலை வெறி தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக புகாரளிக்க பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க செல்வதாக இருந்தது. அவருடன் உடன் செல்ல புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் மூர்த்தி டிஜிபி அலுவலகம் அருகே உள்ள டீக்கடை முன் காத்து இருந்தார். அப்போது அங்கு வந்த விசிகவினர் சிலர் மூர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க துவங்கினர்.

செப் 06, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
செப் 06, 2025 14:48

அரசியல் கட்சிக்குள்ள அடிச்சிகிட்டாங்கன்னா வேடிக்கை பாக்கத்தான் செய்வாங்க காவலர்கள். சாதாரண மக்களையே தள்ளிவிட்டு திருடிட்டு போறவங்கள ஏன் தடுக்கலனு கேட்டதுக்கு சென்னை, திருவான்மியூர் காவலர் ராஜ்கபூர் என்பவர் "ஆமாம் பாக்கத்தான் செய்வாங்க, எங்கள கேட்க நீங்க யாரு, மேலதிகாரி கேட்பாங்கனு" சொன்னாரு. ஆனா எந்த மேலதிகாரி இவர காவலர் சேகருடன் கடற்கரைக்கு வரும் மக்களிடம் மொபைலை பிடுங்கி பணத்தை அதிகார பிச்சை எடுக்க சொன்னதென்று தெரியவில்லை. பல காவலர்களுக்கு அவங்களுக்கு கொடுக்கப்பட்ட சரியான வேலைய ஒழுங்கா செய்ய தெரியல சாமி. மக்களை பொது இடங்களில் அதட்டி, மிரட்டியடித்து மாமூல் பணம், கருப்பு பணமாக சேர்த்துவைக்க மட்டும் வராங்க.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி