உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இவ்வளோ தப்பு நடந்திருக்கா? நீதிபதி கிடுக்குபிடி கேள்வி | Savukku Shankar | Chennai High Court

இவ்வளோ தப்பு நடந்திருக்கா? நீதிபதி கிடுக்குபிடி கேள்வி | Savukku Shankar | Chennai High Court

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த டிசம்பர் 24ல் கைது செய்தனர். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார் என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி போலீஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சமீப காலமாக கருத்து தெரிவித்ததற்காக குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதுடன் அவர்கள் கைது செய்யப்படுவதையும் காண முடிகிறது.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை