உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 36 மாணவர்களை வீடு புகுந்து தூக்கிய போலீஸ் | coimbatore police raid | students residences | Kovai

36 மாணவர்களை வீடு புகுந்து தூக்கிய போலீஸ் | coimbatore police raid | students residences | Kovai

கோவை மாவட்டத்திலுள்ள இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஏராளமான வெளியூர் மாணவர்கள் தங்கிப்படிக்கின்றனர். செட்டிபாளையம் நீலம்பூர் சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்தும், தனியார் விடுதிகளிலும் மாணவர்கள் தங்கியுள்ளனர். இங்கு, கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. சென்னையில் பிடிபட்ட ஒரு மாணவர், கோவையில் தங்கியிருக்கும் மாணவர் தனக்கு கஞ்சா அனுப்பி வைத்ததாக போலீசிடம் கூறியதாக தெரிகிறது. ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலையில் இருந்து நீலம்பூர், சூலூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை