/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ எஸ்ஐயை அடிக்க பாய்ந்த திமுகவினரால் பரபரப்பு | Mayiladuthurai | DK Party | Mayiladuthurai DMK Issue
எஸ்ஐயை அடிக்க பாய்ந்த திமுகவினரால் பரபரப்பு | Mayiladuthurai | DK Party | Mayiladuthurai DMK Issue
மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் திராவிடர் கழக கூட்டம் நடந்தது. பேச்சாளர் மதிவதினி பேசி கொண்டு இருந்தார். அப்போது மயூரநாதர் சுவாமி ஊர்வலம் வந்தது. சில சர்ச்சையான கருத்துக்களை கூறி மதிவதினி விமர்சித்தார். சுவாமி சப்பரம் அப்பகுதியை கடக்கும் வரை பேச்சை நிறுத்தும் படி பாதுகாப்புக்கு நின்றிருந்த எஸ்ஐ கண்ணன் கூறினார். இதனால் கோபமடைந்த திமுகவினர் எஸ்ஐயை சுற்றி வளைத்து அடிக்க பாய்ந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி, திமுக கவுன்சிலர் ரஜினி உட்பட 20 பேர் எஸ்ஐயை தள்ளிவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆக 24, 2024