உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பாசக்கார 2 மகன்கள் உட்பட 6 பேருக்கு சிறை | Thiruvallur | Investigation | Fraud | Scam | Gummidipoond

பாசக்கார 2 மகன்கள் உட்பட 6 பேருக்கு சிறை | Thiruvallur | Investigation | Fraud | Scam | Gummidipoond

திருவள்ளூர், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன் வயது 56. அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். அக்டோபர் 22ல் வீட்டு குளியலறையில் இறந்து கிடந்தார். பாம்பு கடித்து இறந்ததாக குடும்பத்தார் கூறினர். கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் தந்தையின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டிருந்த பணத்தை கோரி விண்ணப்பித்தனர். கணேசனின் மரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவனம் சந்தேகம் அடைந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க்கிடம் புகார் தெரிவித்தது. கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ தலைமையில் தனிப்படை விசாரணை நடந்தது. அதில் கணேசனின் மகன்கள் பாம்பை விட்டு கடிக்க வைத்து தந்தையை கொன்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கணேசன் பல காப்பீட்டு நிறுவனங்களில் 2.50 கோடிக்கு காப்பீடு செய்துள்ளார். குடும்பம் கடனில் சிக்கி இருந்ததால் தந்தையை தீர்த்து கட்டி கடன்களை அடைக்க மகன்கள் முடிவு செய்தனர். அதை இயற்கை மரணமாக நம்ப வைக்க திட்டம் போட்டனர். 3 மாதங்களுக்கு முன்பே கணேசனை நல்ல பாம்பை வைத்து கடிக்க வைத்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் அதில் இறக்கவில்லை. கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பை கடிக்க வைக்க முடிவு செய்தனர். அரக்கோணம் அடுத்த மணவூரை சேர்ந்த பாலாஜி, பிரசாந்த், திருத்தணி தினகரன், நவீன்குமார் ஆகியோர் இதற்கு உதவினர். கட்டுவிரியன் பாம்பை அக்., 21ல் வீட்டிற்கு கொண்டு வந்தனர். கணேசன் துாங்கி கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்தனர். ஆனால் குளியலறையில் பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர். கணேசனின் இரு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளோம் என போலீசார் கூறினர். #Thiruvallur | #Investigation | #Fraud | #Scam | #GummidipoondiPolice

டிச 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை