/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ 15 கிமீ தூரத்துக்கு கேட்ட பட்டாசு சத்தத்தால் மக்கள் அச்சம்! Sivakasi Fire Creakers | Fire Accident
15 கிமீ தூரத்துக்கு கேட்ட பட்டாசு சத்தத்தால் மக்கள் அச்சம்! Sivakasi Fire Creakers | Fire Accident
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஓடம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை தீபாவளி விற்பனைக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்த பட்டாசு அறையில் திடீரென தீப்பிடித்தது. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. பட்டாசு சத்தம் 15 கிலோமீட்டர் தூரம் கேட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
செப் 28, 2024