செய்தி சுருக்கம் | 01 PM | 16-02-2025 | Short News Round Up | Dinamalar
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். They have to come to the terms of the Indian Constitution என்கிறார் மத்திய கல்வி அமைச்சர். மும்மொழி கொள்கையை rule of law என்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு மும்மொழி கொள்கையை கட்டாயமாக்குகிறது? என கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்தியா. ஒத்திசைவு பட்டியலில் உள்ளதுதான் கல்வி. அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று blackmail செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்து கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தை கேட்பதுபோல் திமிராக பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டில்லி பார்க்க வேண்டியிருக்கும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.