செய்தி சுருக்கம் | 08 AM | 09-08-2024 | Short News Round Up | Dinamalar
ரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் தனது இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி வென்றார். அவர் தனது மற்ற 5 முயற்சிகளை பவுல் செய்ததால் பின்னடைவு ஏற்பட்டது. பாகிஸ்தான் வீரர் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் பெற்றார். கரீபியன் தீவின் கிரெனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார். தற்போது வெள்ளி வென்றிருப்பதன் மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற 4வது இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெள்ளி பதக்கம் இதுவாகும். மொத்தம் 1 வெள்ளி 4 வெண்கலத்துடன் இந்தியா பதக்கபட்டியலில் 64வது இடத்தில் உள்ளது. பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்தனர்.