உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / ஆக., 3,4 கொடைக்கானலில் டாக் ஷோ

ஆக., 3,4 கொடைக்கானலில் டாக் ஷோ

துறுதுறுன்னு இருக்கற உங்க பப்பியோட திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 'தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷன்' சார்பில், கொடைக்கானல், மூஞ்சிக்கலில் உள்ள, தி கொடைக்கானல் பப்ளிக் பள்ளியில், ஆக., 3, 4ம் தேதிகளில், டாக் ஷோ நடக்கிறது. கென்னல் கிளப் ஆப் இண்டியா சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் பப்பிகளின் திறன்களை வெளிக்கொணரும் வகையில், தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷனுடன் இணைந்து, தி மெட்ராஸ் கெனைன் கிளப் மற்றும் தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில், ஆறு 'ரிங்'குகளில், பிரத்யேகமாக டாக் ஷோ நடக்கிறது. இதில், நாய்களை 11 குழுக்களாக பிரித்து, போட்டி நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து அனுபவமிக்க நடுவர்கள் பங்கேற்பதால், சிறந்த பப்பிக்கு பரிசு உறுதி. டாக் ஷோவில் பப்பிகள் செய்யும் சேட்டைகளை ரசிக்க விரும்புவோர், பார்வையாளராக பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 044- 26260 693/ 98840 46278 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ