உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / பொள்ளாச்சியில் மூத்த குடிமக்களுக்கான வீடுகள்; ஸ்டெப் ஸ்டோன் நிறுவனம் அறிவிப்பு

பொள்ளாச்சியில் மூத்த குடிமக்களுக்கான வீடுகள்; ஸ்டெப் ஸ்டோன் நிறுவனம் அறிவிப்பு

பொள்ளாச்சியில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வசதிகளுடன் வீடு வாங்க, 'ஸ்டெப் ஸ்டோன் ஆலம்' திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று அறிமுகமாகிறது. இது தொடர்பாக ஸ்டெப் ஸ்டோன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: எங்கள் நிறுவனம் சார்பில் பொள்ளாச்சியில், 8 ஆண்டு களுக்கு முன், ஸ்டெப் ஸ்டோன் ஆலம் திட்டத்தின் முதல்கட்டம் அறிவிக்கப் பட்டது. இதில் மூத்த குடி மக்கள் வீடு வாங்க அமோக ஆதரவு அளித்தனர். மக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இதன் இரண்டாம் கட்ட திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோதிஷ்குமார் கூறியதாவது: 'ஸ்டெப் ஸ்டோன் ஆலம்' முதல் கட்டம் மூத்த குடி மக்களுக்கான ஆறுதல், கவனிப்பு, தோழமையை ஒருங்கிணைக்கும் வகையில் கட்டப்பட்டது. நவீன வசதிகள் மற்றும் தொழில்முறை பராமரிப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைந்துள்ளது. இயற்கையின் மடியில் நிறைவான வாழ்க்கை முறையை அனுபவிக்கும் வாய்ப்பை மூத்த குடி மக்களுக்கு இத்திட்டம் வழங்குகிறது. இதில் ஸ்டெப் ஸ்டோன் ஆலம் இரண்டாம் கட்டம், சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. எங்கள் திட்டங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் விபரங்கள் பெற, 93828 29595 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி