உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

குறைந்த விலையிலான ஆண்ட்ராய்டு போன்கள் வருகையால், இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 35 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில், 50 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் ஆசிய -பசிபிக் மொழிகளுக்கான தலைவர் ரிச்சா சிங், மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !