அம்ருத் திட்டத்தில் ராமேஸ்வரம்
'நாட்டில், நகரங்களை மேம்படுத்தும் 'அம்ருத்' திட்டத்தின் 500 நகரங்களின் பட்டியலில் ராமேஸ்வரமும் இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை ஒரு லட்சம் இருந்தால்தான் இந்தத் திட்டத்தில் சேர முடியும். ஆனால், அப்துல் கலாம் பிறந்த புண்ணிய பூமி என்பதால் விதிவிலக்கு அளிக்கப்பட்டது' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். ராமேஸ்வரம் 'பேக்கரும்பு' எனும் இடத்தில் கலாமின் வெண்கலச் சிலையை திறந்துவைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.