ஆசிய சர்பிங் போட்டியில் அசத்தும் வீராங்கனைகள்...
சென்னையில் நடக்கும் ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு முதல் முறையாக இந்தியாவின் ரமேஷ் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.ஆசிய சர்பிங் கூட்டமைப்பு சார்பில், இந்தியா , தமிழ்நாடு சர்பிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் நான்காவது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் - 2025 போட்டி சென்னை மாமல்லபுரம் கடல்கரையில் நடந்து வருகிறது.இதன் ஆடவருக்கான ஓப்பன் அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இதன் முதல் ஹீட்டில் இந்தியாவின் ரமேஷ் புதிஹல், கிஷோர் குமார் உட்பட 4 பேர் போட்டியிட்டன. போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தோனேசியாவின் பாஜர் ஆரியானா 13.83 புள்ளியும், இந்தியாவின் ரமேஷ் புதிஹல் 11.43 புள்ளிகள் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். துரதிர்ஷ்டவசமாக இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழகத்தின் கிஷோர் நான்காவது இடம் பெற்று வெளியேறினார்.