உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலையை ஆராய்வோமா?

திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலையை ஆராய்வோமா?

- டி.ஆர். ரமேஷ் - தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம் 'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முன்பிருந்த நிலையே தொடரும்' என கூறியிருக்கிறார், தமிழக சட்ட அமைச்சர் நிர்மல்குமார். நல்லது... அவர் கூறியவாறே, திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலை என்னவென்று சற்றே ஆராய்வோமா; அதாவது, சங்க காலம் முதல் 19ம் நுாற்றாண்டு வரை... சங்க இலக்கியமாம் திருமுருகாற்றுப்படையில் பாடப்பெற்ற முதல் ஆற்றுப்படைவீடு தான், இத்திருத்தலம். பரிபாடல் இத்தலத்து திருவிழாவைக் காட்சிப்படுத்துகிறது. சிலப்பதிகாரம் காடுகாண் காதையில், கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கி வரும்போது இச்சேயோன் குன்று விழாக்கோலம் பூண்ட காட்சியும், அங்கு வேத முழக்கமும், இசை முழக்கமும் ஒலிக்கும் நிகழ்வையும், இளங்கோவடிகள் காட்சிப்படுத்துகிறார். திருப்பரங்குன்றம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள முருகன் குன்று! இந்த வரலாற்று உண்மையை வந்தேறிகளின் அடிவருடிகள் மாற்றுவதற்கு இடம் கொடுப்பது, தமிழர் மரபிற்கும், பெருமைக்கும் இழுக்கு. குன்றின்மேல் இட்டவிளக்காகத்தான், திருப்பரங்குன்றம் கோவில் கார்த்திகை தீபம் விளங்கி வந்தது. மதுரையை, 14ம் நுாற்றாண்டில் ஒரு பகுதியை ஆண்டு வந்த சுல்தான் ஆட்சி, விஜயநகர சாம்ராஜ்யத்தால் வீழ்த்தப்பட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் கார்த்திகை தீபத்தை குன்றின்மேல் ஏற்றுவதில் இன்னல்கள் தோன்றி இருக்கும். அதன்பின் வெள்ளையர் ஆட்சியில், '-தமிழ்க்கடவுள் முருகன் குன்று இம்மலை' என, (மலையில் 33 சென்ட் நெல்லித்தோப்பைத்தவிர) வெள்ளையரின் மேலாண்நீதிமன்றம் (London privy council) தீர்ப்பளித்தது. அதன்பின்னரும், குன்றின் மீது தீபமேற்றும் கோவில் நடைமுறை வழக்கத்தை நிறைவேற்ற மறுப்பது தமிழர் பண்பாட்டில், வழிபாட்டு உரிமையில் தலையிடும் செயலன்றி வேறென்ன? குன்றத்தில், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று, தமிழர் நெஞ்சை நிமிரச் செய்த தனி நீதிபதியின் தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வால் உறுதி செய்யப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் இஸ்லாமியர் யாரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக சொல்லமுடியாது. ஹிந்துக்கள் இடத்தில் தீபமேற்ற அவர்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்பதே உண்மை.

முறைகேடு

கடந்த 1937, மார்ச் 29ல், '1926 அறக்கட்டளைகள் சட்டம்' மூலம், அன்றைய ஹிந்து சமய வாரியம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் திருப்பரங் குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்தின் ஓர் அங்கம். அதாவது, திருப்பரங்குன்றம் கோவில், மீனாட்சி கோவிலுக்குச் சொந்தமான கோவில். 1937ல் கோவிலை ஹிந்து சமய வாரியம் கைப்பற்றி, அதை 1951ல் அறநிலையத்துறை அறிவிக்கை செய்யப்பட்ட கோவில் என்று, அதன் நிர் வாகத்தை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று, 1971, டிச., 13ல் சென்னை உயர்நீதி மன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அன்றைய ஆணையர் செய்த மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை மதித்து அப்பொழுதாவது கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியேறாமல் இன்று வரை தொடர்கின்றனர். மீனாட்சி கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலை தனிக்கோவிலாக பிரிப்பது என்று அறநிலையத்துறை செயலரும் , ஆணையரும் , 1979ல் சட்ட விரோதமாக முடிவெடுத்து அரசாணை (எண் 627) வெளியிட்டனர்.

மதிக்கப்பட வேண்டும்

திருப்பரங்குன்றம் கோவில் தனியாக செயல்பட, அதற்கு வருமானம் உள்ளது. மீனாட்சி கோவிலை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை என்றும் காரணம் சொல்லப்பட்டது. ஒரு கோவிலின் பாரம்பரிய முறையை மாற்ற ஆணையருக்கோ, அரசுக்கோ துளியும் அதிகாரம் கிடையாது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யத்தான் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம், மீனாட்சி அம்மன் கோவிலில், 'அறநிலையத்துறை வேலைக்காரர்' செயல் அலுவலராக இருப்பதே சட்டவிரோதம்; நீதிமன்ற அவமதிப்பு. அதனால் தான், அமைச்சர் கூறியவாறே, நாங்களும் சொல்கிறோம், 'முன்பிருந்த நிலையே தொடர வேண்டும்!' திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும். திருப்பரங்குன்றம் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்துடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும். இக்கோவில் செயல் அலுவலர் வெளியேற்றப்பட வேண்டும். நுாற்றாண்டுகளாக குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிர்ந்த கார்த்திகை தீபம், மீண்டும் திருப்பரங்குன்றின் மீது தீபத்துாணில் ஏற்றப்படவேண்டும்; நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்படவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Raj Kamal
ஜூன் 17, 2026 15:51

முன்பிருந்த நிலையை ஆராய்வோமா? ஆராய்ந்து என்ன செய்ய போகிறீர்கள்? Election நேரமாக இருந்தால் மட்டுமே இது செல்லுபடியாகும். மற்ற படி இது ஒரு பெட்டி செய்தியே. ஒருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். விஜய் கட்சி இதில் ஒன்றுமே தெரியாதது போல் இருந்துவிட்டு செல்வார்கள். அது தான் நடக்கும்.


ديفيد رافائيل
ஜூன் 17, 2026 08:47

​"அறநிலையத்துறையின் தோற்றம் மற்றும் திருப்பரங்குன்றம் கோவிலின் சட்டப் போராட்டங்கள் குறித்த மிகத் துல்லியமான வரலாற்றுப் புள்ளிவிவரங்களை வழங்கிய தினமலருக்கு நன்றி. வாசகர் சுவாமிநாதன் கூறியது போல, பலரும் இத்துறையின் வரலாற்றை அரைகுறையாகப் புரிந்து வைத்துள்ள சூழலில், இந்தச் செய்தி பக்கா தெளிவைத் தருகிறது. புதிய த.வெ.க அரசு, முந்தைய ஆட்சிகளின் தவறுகளைக் களைந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்"


ديفيد رافائيل
ஜூன் 17, 2026 08:45

​"திருப்பரங்குன்றம் திருக்கோவில் சங்க காலம் தொட்டே தனக்கான வருமானத்துடனும், பல்லாயிரமாண்டு ஆன்மீகப் பாரம்பரியத்துடனும் அக்மார்க் கம்பீரமாகத் தன்னாட்சியோடு இயங்கிய தலம். வாசகர் கிருஷ்ணா அவர்களின் கவலை நியாயமானது, அரசியல் ஆதாயங்களுக்காகவும், நிர்வாகக் கமிஷன்களுக்காகவும் ஆன்மீக வழிபாட்டு உரிமைகளிலும், கோவில் சொத்துக்களிலும் அதிகாரிகள் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் கீழ் பழைய பாரம்பரிய முறையிலேயே கோவில் நிர்வாகம் தூய்மையாகத் தொடர வேண்டும்"


ديفيد رافائيل
ஜூன் 17, 2026 08:44

​"வாசகர் காசிமணி பாஸ்கரன் மற்றும் கட்டுரையாளர் டி.ஆர். ரமேஷ் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது தான் அக்மார்க் கசப்பான உண்மை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரை... அறநிலையத்துறையின் செயல் அலுவலர் நியமனம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த பிறகும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு அதிகாரிகள் கோவிலுக்குள் பிடிவாதமாக உட்கார்ந்திருப்பது என்ன மாதிரியான ஜனநாயகம்? சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மதிப்பளித்து, திருப்பரங்குன்றம் கோவிலில் முன்பிருந்த பழைய பாரம்பரிய நிர்வாக முறையையே புதிய அரசு உடனடியாகத் தொடர வழிவகை செய்ய வேண்டும்"


manian
ஜூன் 17, 2026 08:40

whatever may be the previous history none of the dravidian parties will allow deepam there as minority politics dominates TN politics. hindus should atleast protect the remaining temples at Madurai Pazhani Chidambaram Rameswaram.


Kasimani Baskaran
ஜூன் 17, 2026 05:47

பிரிட்டிஷ் நீதி மன்ற தீர்ப்பின் படி நெல்லித்தோப்பைத்தவிர மலையின் அனைத்து பகுதியும் முருகனுக்கு சொந்தம். கோரிப்பாளையம் அல்லது மலை உச்சி ஆகிய இரண்டில் ஒன்றுதான் சிக்கந்தருக்கு உண்மையான கல்லறை. இரண்டு கல்லறையும் சிக்கந்தருக்கு வேண்டும் என்பது கலகம் செய்ய ஒரு உத்தி, அக்கிரமம். ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு எதிராக நடந்து கொள்ளும் இந்து அறநிலையத்துறையை கோவிலை விட்டு சட்டபூர்வமாக விரட்டியடிக்காமல் இதற்க்கு நிரந்தர தீர்வு காண முடியாது. விட்டு வைத்தால் சமணர்களையும் கூட கூட்டி வந்து உரிமை கொண்டாடுவார்கள்.


ஊர்குருவி
ஜூன் 16, 2026 20:32

ஒவ்வொரு ஹிந்துக்களும் தங்கலுக்குள் ஒரு வினா எழுப்பிக்கொள்ளவேண்டும் .கேள்வி என்னவென்றால் சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்றால் நான் ஏன் என்னுடைய கிருஸ்தவ ,இஸ்லாமிய நண்பர்களுக்கு சம்மமாக அரசால் பாவிக்கப்படவில்லை என்று .விடையை அரசிடம் கேட்கவேண்டும் .என்னுடைய முன்றைய கருத்தில் உண்மையான சட்டத்தின் நோக்கம் அர்த்தம் என்னவென்று குறிப்பிட்டு இருக்கின்றேன் .அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும் .


Pandi Muni
ஜூன் 16, 2026 19:56

சிக்கந்தரோ நமுருகன் மலையில் பிணத்தை புதைத்து விட்டு உரிமை கொண்டாடுவதை, அங்குள்ள கல்லறையை அகற்றுவதன் மூலம் சரி செய்யமுடியும்


ஊர்குருவி
ஜூன் 16, 2026 18:13

அறநிலைய துறை ஏற்படுத்தி அதற்க்கு ஒரு தனி அமைச்சரை நியமித்தது 1970இல் கருணாநிதிதான் .அதற்குமுன் சட்டம் இருந்தது ஆனால் தனி துறை இல்லை .


Nachiar
ஜூன் 16, 2026 18:09

ரமேஷ் அவர்கள் செய்துவரும் சேவை அளப்பரியது. நீங்கள் இன்னும் பல்லாண்டு நீடுழி வாழ தெய்வம் அருள வேண்டும். இதை பிரசுரித்த மலருக்கும் நன்றி. புரியாத ஒன்று ஏன் இந்துக்களுக்கு சொரணை இல்லை என்பதுதான். எப்போ சரியானவர்களுக்கு வாக்களிப்பார்களோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை