உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / இது என்ன... திராவிட பா.ஜ.,வா?

இது என்ன... திராவிட பா.ஜ.,வா?

'தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் இந்நாள் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவருமான நாகேந்திரனை தலை வராக ஆக்கினால், 'கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று கூறிய, ஊழல் குற்றம் புரிந்த முன்னாள் அமைச்சர்களை கொண்ட அ.தி.மு.க., ஏன் இன்றுவரை, எந்த உதிரி ஜாதி கட்சிகளையும் கூட்டணிக்கு இழுத்து வரவில்லை? பா.ஜ., கூட்டணியில் உள்ளவர்கள் கூட வர மறுக்கின்றனரே... ஏன்? தி.மு.க., ஆட்சி மீது, மக்கள் கடும் கோபம் கொண்டிருக்கின்றனர் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அந்த கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றும் திறன் கொண்ட எம்.ஜி.ஆர்., முகத்தையும், ஜெயலலிதா என்ற சிங்க முகத்தையும் இன்று காணோம்! அளவற்ற பணம் தா லிக்கு தங்கம், லேப்டாப், சைக்கிள் முதலிய நலத்திட்டங்களால், 90 சதவீத பெண்களைக் கவர்ந்து, பலம் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. அவருடைய வெற்றிடத்தை இனி, அ.தி.மு.க.,வில் யா ராலும் நிரப்ப முடியாது. அ.தி.மு.க.,வில் தர்மயுத்தம் செய்தவரிடம், மொத்த உதிரி ஜாதி கட்சிகளையும் அதிக விலைக்கு வாங்கும் அளவற்ற பணம் இருக்கிறது. ஆனால், மக்கள் ஏன் இவர்களை நம்ப மறுக்கின்றனர், கூவத்துார் நாடகமா? கடந்த லோக்சபா தேர்தலில், 18 சதவீத ஓட்டுகளை பா.ஜ., கூட்டணி பெற்றது. அதில், பா.ஜ.,வுக்கு மட்டும், 12 சதவீதம் கிடைத்தது. கடந்த வாரம் வரை, அந்த கூட்டணி நின்றது. இந்த கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில், தி.மு.க., குறைந்த அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., போட்டியிட்டு தி.மு.க., வென்ற இடங்களில், ஓட்டு வித்தியாசம் அதிகம். எட்டு சதவீத ஓட்டு வாங்கிய பேச்சுத்திறமை மிக்க சீமானை, இவர்களால் இழுக்க முடியவில்லை. அண்ணாமலை, பா.ஜ., தலைவராக இருந்தவரையில், 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற தலைப்பில் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மக்கள் அவரை உற்று நோக்கினர்; தி.மு.க.,வினர் பயந்தனர். டில்லி யில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, டி.ஆர்.எஸ்., கவிதா போன்று, இங்கும் பலர் கைதாவர் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டில்லிக்குச் சென்ற தி.மு.க.,வினர், அங்கு ஆட்சியாளர்களைப் பார்த்து வந்தவுடன், சோதனைகள், வழக்குகள் அனைத்தும் நின்றுவிட்டன. 'வீராவேசமாக, ஒன்றிய அரசு எனச் சொல்லி இங்கு விமர்சனம் செய்வது; அசிங்கப்படுத்துவது, ஆனால், டில்லி சென்று நட்பு கொண்டாடுவது... இது தான் திராவிட கலாசாரம்' என, பொதுமக்கள் கிண்டலடிக்கின்றனர். அ.தி.மு.க.,வை வெற்றிகரமாக நடத்திய ஜெயலலிதா, சற்று வித்தியாசமானவர். எதிர்த்தால், து வம்சம் செய்து விடுவார் ; உதாரணம், வாஜ்பாய் அரசை கவிழ்த்தது! தமிழகத்தில், 58 ஆண்டுகளில், தி.மு.க., மட்டும் தான் ஊழல் செய்ததா... அ.தி.மு.க., செய்யவில்லையா? தலைவியும், தோழியும் சிறைக்குச் சென்றனரே...? மக்கள் கேட்கும் கேள்வி என்ன... ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, மற்றொரு கண்ணுக்கு வெண்ணையா? அமைதியாக, வாய் பேசாமல் இருக்கும் முன்னாள் என்.ஐ.ஏ., அதிகாரியும், தற்போதைய தமிழக கவர்னருமான ரவியை, அவருடைய மதிப்பைத் தரம் தாழ்த்துவது போல், தி.மு.க.,வினர் பேசும் பேச்சுகள், அன்று, தி.மு.க.,வின் முன்னாள் தலைவர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் காமராஜரை, 'எருமை தோலுடைய கருப்பன்' என்று பேசியதற்கு ஒப்பாக விளங்குகின்றன.

ஊழல் புகார்

கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியது, அண்ணாமலை கொடுத்த பல ஊழல் புகார் ஆகியவற்றின் மீது, இதுவரை எந்த விசாரணையும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக, '2ஜி' புகழ் கனிமொழியை, 'ஆப்பரேஷன் சிந்துார்' குழுவில் சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பி அழகு பார்த்தது பா.ஜ.,வின் மத்திய அரசு. இப்படி அனைத்து கவுரவங்களையும் அனுபவித்து விட்டு, 'மாநில அரசுக்கு மத்திய அரசு உதவுவதே இல்லை' என்று, தி.மு.க., கூறுகிறது. ஐக்கிய முன்னணியின் மன்மோகன் சிங் ஆட்சியில், 2ஜி வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்ட கனிமொழியும், ராஜாவும், பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை ஆனது, நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது. நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்கள், தவறுகள் மீது பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை, தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். அதே போல், அ.தி.மு.க.,வின் ஊழல் முகங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி, பா.ஜ.,வை தமிழக மக்களுக்கு மிக நன்றாக அடையாளம் காட்டிய அண்ணாமலையை ஓரந்தள்ளி, அவர் வாயாலேயே, 'அ.தி.மு.க.,வின் பழனிசாமி தான் முதல்வர்' எனச் சொல்ல வைத்த பா.ஜ.,வையும் மக்கள் கவனித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வின் பழைய பெருச்சாளிகளும், தமிழகத்தில் ஊழலற்ற, அறிவுமிக்க தலைவரான அண்ணாமலையை, முன்னாள் முதல்வர் காமராஜர் போல உருவாகாமல் தடுத்து விட்டனர் என்பதே தற்போதைய பேசுபொருளாகி விட்டது. 'இது என்ன... திராவிட பா.ஜ.,வா?' என கேட்கும் மக்களுக்கு, யார் பதில் தரப் போகின்றனர்? - டாக்டர் அர்த்தநாரி பிரபுராஜ் 98843 53288


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

கிருஷ்ணன்_பொள்ளாச்சி
செப் 10, 2025 05:04

மறுக்க முடியாத உண்மை இது காரணம் தமிழ்நாட்டில் அப்படி ஒரு தலைவர் வந்து விட கூடாதென்று திராவிட கட்சிகள் நினைக்கின்றனவோ இல்லையோ தமிழக பாஜக தலைவர்கள் நினைக்கின்றனர் தம்பி அண்ணாமலை என் தம்பி அண்ணாமலை என் பேசியது எல்லாம் பச்சை பொய் என்று தில்லி கூட்டத்தில் நிருபித்து விட்டனர்.... ஆனால் அவனின்றி (ஈசன்=அண்ணாமலையார்)அனுவும் அசையாது என்பது நிதர்சனமான உண்மை...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 10, 2025 04:08

அண்ணாமலே ரசிகர் மன்ற தலைவரா? கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சாம். நல்ல குடிகாரன் காமெடி அது. அந்த நிகழ்வு பற்றி அனைவரும் நன்கு அறிவார்கள். என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி அது அவர்கள் கையில் உள்ளது. இந்த சிரிப்பு டாக்டரை பார்த்து சிரிப்பதா, அழுவதா?


சிட்டுக்குருவி
செப் 09, 2025 20:59

தமிழ்நாட்டை வெகுவாக சுரண்டும் கொள்ளையர்களிடத்தில் இருந்து காப்பாற்றவேண்டிய கடமையே முக்கியமானது .அதற்க்கு இதை தவிர வேறு வழியில்லை .வேண்டாத கருதிகளையெல்லாம் எழுதி மக்களை வீணாக குழப்பி விடாதீர்கள் .குற்றங்களை விசாரிப்பதில் காவல்துறையே முக்கியமானது .அவர்களும் அரசியல்வாதிகளுக்கு பயப்படும் சூழ்நிலையில் உள்ளவர்கள் .நீதித்துறையும் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே உள்ளதா என்ற வினா ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது .அதனால் பொறுமையே சிறந்தது .


சத்யநாராயணன்
செப் 09, 2025 14:54

இந்தக் கட்டுரையின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது இவர்கள் எல்லோரும் ஒன்று கூடி எடப்பாடியை முதல்வர் ஆக்கினால் தமிழக பிஜேபிக்கும் பிரயோஜனம் இல்லை நாட்டு மக்களுக்கும் பிரயோஜனம் இல்லை இவர்கள் அண்ணாமலை அவர்களை நீக்கி விட்டு நைனார் நாகேந்திரனை தலைவராக ஆக்கியது ராஜதந்திரம் என்ற பார்வையில் ஏற்க முடியவில்லை அது ஒரு நரி தந்திரமாக வேண்டுமானால் இருக்கலாம் ஒரு சிறந்த கட்சியினுடைய கொள்கைகளையும் அதன் மாண்புகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மைகளையும் நாட்டு மக்களின் மனதில் பதிய வைப்பதற்கு சிறிது காலமாகத்தான் செய்யும் அந்த மகத்தான பணியை தான் அண்ணாமலை அவர்கள் மிகச் சிறந்த முறையில் செய்து கொண்டிருந்தார் இப்போது அதை எல்லாம் பிஜேபியின் மத்திய தலைமை உருக்குலைத்து விட்டது இனி வரும் காலங்களிலும் அண்ணாமலை அவர்களை பிஜேபியின் தலைவர் ஆக்கினாலும் கூட தமிழக மக்களின் மனதில் இடம் பிடிப்பது அத்தனை சுலபமாக இருக்காது


SANKAR
செப் 09, 2025 20:03

sathya thanks for meaningful post in decent language...rare here!


SJRR
செப் 09, 2025 14:19

தமிழகத்திற்கு இன்று 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்ற அதற்கு முக்கிய காரணங்களில் ஊழல் மற்றும் இலவசங்கள்.


Rajan A
செப் 09, 2025 14:02

என்னதான் பாஜகவில் இருந்தாலும் தாய் கட்சி பாசம் விடாது நயினாருக்கு. இடப்பாடியை எப்படியும் முதல்வாராக்க பாடுபடுவார். 3 வருடங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம்


RRR
செப் 09, 2025 13:13

எடப்பாடியும் நயினாரும் மண் குதிரைகள்... இவர்கள் தேர்தல் என்னும் ஆற்றில் இறங்கி... விளங்கினாற்போலத்தான்...


pakalavan
செப் 09, 2025 13:11

பிராடு


vivek
செப் 09, 2025 13:51

திராவிடம் என்றாலே பிராடு தானே


மாயவரம் சேகர்
செப் 09, 2025 12:55

2ஜி வழக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்டு விசாரணைக்கு வந்து, அந்த விசாரணைக் கமிஷன் நீதிபதி, தள்ளுபடி செய்து விட்டார். இதற்கு பாஜகவை குறை சொல்வது என்ன நியாயம்? தேர்தல் அரசியலில் குறிப்பாக தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி கணக்கில், அண்ணாமலை மாத்திரம் முடிவு எடுக்க முடியாது. அண்ணாமலை அளித்த விளக்கத்தையும் அவர் மீது திணிக்கப்பட்டது என கூறுவது குறை மட்டுமே கூறும் வியாதி உள்ளவர்களுக்கு தோன்றும் கருத்து. இது போன்ற கட்டுரைகளில் சாதிக்க நினைப்பது என்ன? தரப்போகும் பலன்தான் என்ன? எதிர் கட்சியினர் குற்றச்சாட்டை வைத்தே கேள்வி கேட்கும் ஊடக கலாசாரம், காங்கிரஸ் கட்சி திமுக கட்சி காரர்களின் ஆதார பூர்வமாக குற்றச்சாட்டை வைத்து கேள்விகள் கேட்பதில்லை .அது போலத்தான் தங்களது கட்டுரை பாஜகவை கேள்வி கேட்டு குறை காண்கிறது .


SANKAR
செப் 09, 2025 13:13

case dismissed when BJP was ruling.BJP promised appeal which it NEVER did.Prison to Raja and Kanimozhi happened when MMS was PM


ஆரூர் ரங்
செப் 09, 2025 16:01

உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு மேல் விசாரணை நடக்கவில்லை. சிபிஐ தினசரி விசாரணைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு பல்லாண்டுகளுக்கு முன் ராசா முறைகேடாக ஒதுக்கினார் என அவரால் ஒதுக்கப்பட்ட எல்லா லைசென்ஸ்களையும் சுப்ரீம் கோர்ட் கேன்சல் செய்துவிட்டது.


SANKAR
செப் 09, 2025 20:06

why no vulisaranai for THREE years Because Raja openly stated he would start a case for 5G oozhal where Govt revenue was FAR BELOW Govts own reserve Price and no explanation by Centre till date


vbs manian
செப் 09, 2025 12:44

மோடி விரும்பாத பல விஷயங்கள் இங்கு நடக்கின்றன. ப ஜெ வுக்கு உயிர் கொடுத்தவரை புறம்தள்ளி பலவீனப்படுத்திவிட்டனர். நிஜமே சூரியன் போல் வெட்ட வெளிச்சமாய் நிற்கும் கழக ஊழல் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் இல்லை. ப ஜெ க ஏதோ ஒப்புக்கு இங்கு அரசியல் செய்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை