வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நானும் இந்த தவறை செய்கின்றேன். படிப்பினை இல்லாததது என்னை அவர்களை விட்டு ஓட வைத்தது.
ஒவ்வொரு செடியும் வளர்ந்து, பூத்து, காய்த்து, பழுத்து, வாடி, வதங்கி, மடியும். இது இயற்கை நிகழ்வு. ரொம்ப யோசிக்கக் கூடாது. காலம் தன் கடமையை சூழலுக்கு ஏற்ப சரிவர தொடர்ந்து செய்தது, செய்கிறது, செய்யும். இது ஒவ்வொரு உயிருக்கும் பொருந்தும். மனிதனும் தானும் ஒரு செடிபோலத்தான் என்பதை உணர்ந்து, தனது மரணத்தை தனிமையுடன், விருப்பத்துடன் எதிர்நோக்கி, ஏற்க கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க பல்லாண்டு, வாழ்ந்த பின் வீழ்க.
இதுக்கு முழுக்க முழுக்க காரணம் பெண்கள் தான் ...ஒரு பெண் தன்னுடைய மாமனார் மாமியாரை கண்டுகொள்வதில்லை இதுவே அவுங்க பெற்றோர நல்ல கவனித்துக்கொள்கிறார்கள்.. ரெண்டு: ஆன் பிள்ளைகள் எல்லாம் பெண் பித்து பிடித்து அவர்கள் பின்னே ஓடுகிறார்கள் ...பெண்டாட்டி மடியே சொர்கம் என்று இருப்பவர்கள் அதிகம் பேர் ... இது ஆன்மிக அறிவு இல்லாததால் வருவது ...இன்று நீ நாளை நாம் என்று பாவம் திரும்ப வரும் என்று சொல்ல, நினைக்க ஒரு அடித்தளம் யாரும் இல்லை ... பாவம் செய்ய அஞ்ச வேண்டும் ...எனக்கு தெரிந்த நிறைய பேர் தன மனைவி கண்டுகொள்ளவில்லை என்றாலும் பிள்ளைகள் முடிந்தளவு தன்னுடைய பெற்றோரை பராமரிக்கிறண்டனர் அவர்கள் போற்றுதளுக்கு உரியவர்கள் பெற்றோரை பேணி காப்பது நம் கடமை ....குலதெய்வ சாபம் பொல்லாதது ..அதற்கு விமோச்சனம் கிடையாது
பெற்றோர்களும் ஒருவகையில் காரணம். தங்கள் பிள்ளைகளை அமெரிக்கா ஐரோப்பா இங்கிலாந்து ஜெர்மனி என்று அனுப்பி விட்டு பெருமை பேசி திரிந்தார்கள். அதன் விளைவு. இன்றும் சிலர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை உதிரி தள்ளுகின்றனர். நம் வளர்ப்பும் ஒரு காரணம். மேலும பிள்ளைகளும் பணத்தின் பின்னால் அலையாமல் குடும்பத்தையும் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளரின் சேவை போற்றுதலுக்குரியது. முதுமையே ஒரு கொடிய நோயாக இருக்கும் போது அவர்களுக்கு வரும் நோய்களுக்கு யார் சிகிச்சை தருவது? மத்திய அரசின் காப்பீட்டு திட்டம் பற்றி தமிழகத்தில் பல முதியோர்களுக்கு தெரிவதில்லை. மாநில திமுக அரசு மத்திய அரசின் எந்த நல்ல திட்டங்களையும் இங்கு அனுமதிப்பதில்லை. முதியோர் எண்ணிக்கையை கணக்கெடுத்து அவர்களுக்கு காப்பீடு அட்டை வழங்க வேண்டும். நம் நாட்டின் இளைஞர் எண்ணிக்கையில் பெருமைப்படும் அரசு அதற்கு ஆதாரமான முதியோர் எண்ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய நாடுகள் போல் எல்லா முதியோருக்கும் பென்ஷன் என்பது போல இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும். முதியோர்களை கௌரவமாக வாழ வைக்கலாம்.
கட்டுரையாளர் நலமுடன் பல்லாண்டு வாழ்க.
வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகள், உயிருக்கு போராடும் தங்கள் பெற்றோரை பார்க்கக் கூட வருவதில்லை. உயிரிழந்துவிட்டால் 'பணம் அனுப்புகிறேன் அடக்கம் செய்து விடுங்கள்' என்கின்றனர். இதைப்படித்துவிட்டு மனது மிகவும் சங்கடப்பட்டது. ஆம், ஒரு சில வெளிநாடு வாழ் பிள்ளைகள், அவர்கள் பெற்றோரை பாரமாக நினைக்கின்றனர். அவர்களுக்கும் அப்படி ஒரு நிலைமை வந்தால், அவர்கள் எப்படி சங்கடப்படுவார்கள் என்று எண்ணவேண்டும். பெற்றோர்களை மதிக்கவேண்டும்.
வலியுடன் கட்டுரை, யதார்த்தமான உண்மை. நிஜத்தை வெளிகொண்டு வந்ததற்கு நன்றிகள். இதேபோல, ஒரு குறிப்பிட்ட முன்னேறிய பிரிவினரில், பெண்ணை பெற்றவர்கள், தங்கள் பெண்ணுக்கு காலம் கடந்தும் திருமணம் செய்துவைக்காமல் இருக்கும், கசப்பான உண்மை பற்றிய கட்டுரை தொகுப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும். பூனைக்கு யார் மணி காட்டுவர் ??
வயதானவர்களை பராமரிப்பது நமது உரிமை மற்றும் பாரம்பரியம். அதிலிருந்து விலகியிருக்காமல் நேர் வழியில் செல்வது நமது சந்ததியினருக்கே நல்ல வருங்காலத்தை அமைத்துக்கொடுக்கும்.
மேலும் செய்திகள்
ரூ. 5,000 இருந்தாலே போதும் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்
28-Feb-2024 | 4
மிகப்பெரிய உணவு பஞ்சம் எதிர்கொள்ளப்போகிறோம்
21-Feb-2024 | 23
நம் குப்பைக்கு நாமே பொறுப்பு!
21-Feb-2024 | 4
ஆணும்தான் காரணம்!
14-Feb-2024 | 5
அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்
07-Feb-2024 | 2
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
07-Feb-2024 | 4
ஆட்டிசம் பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு
10-Jan-2024 | 3
வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!
03-Jan-2024 | 8