தான்சானியாவில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம்
இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தன்று தான்சானியாவில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஏராளமான இந்திய சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவின் உயர் ஆணையர் பிஸ்வதிப் தே தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். குடியரசுத் தலைவரின் உரையை வாசித்து, தேசிய முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்கான நமது கூட்டு உறுதியை வலியுறுத்தினர் இந்தியன் பள்ளியின் மாணவர்கள் தேசபக்திப் பாடல்களை உணர்ச்சிப்பூர்வமாக பாடி இந்தியாவின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். - நமது செய்தியாளர் தானேஷ் ராஜா