லண்டனில் நவராத்திரி
லண்டன் கென்டன் கிரிக்கெட் பூங்காவில் நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் பெருமளவில் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுகின்றனர். இந்த விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.