உள்ளூர் செய்திகள்

துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் கனமழை

துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். கனமழை காரணமாக அரசுத்துறை உள்ளிட்டபல்வேறு துறைகளின் ஊழியர்கள் வீட்டில் இருந்து தங்களது பணிகளை செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோடை காலம் தொடங்க இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய கனமழை ஒரு வித்தியாசமாக இருப்பதை பொதுமக்கள் உணர்ந்தனர். காலநிலை மாறுபாடு உள்ளிட்டவை இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறினர்.- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !