உள்ளூர் செய்திகள்

பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தலைமை வகித்தார். தொழிலாளர்கள் சிலர் தங்களது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவித்தனர். அது தொடர்பாக தூதரக அதிகாரிகளும், சட்ட ஆலோசகர்களும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற அவர்கள் ஆலோசனை தெரிவித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !