லெபனானில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு இரங்கல்
அம்மான் : லெபனான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவையடுத்து இரங்கல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி தூதரகத்தில் வைக்கப்பட்ட இரங்கல் புத்தகத்தில் லெபனான் அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் தங்களது நாடுகளின் சார்பில் இரங்கலை பதிவு செய்தனர். - நமது செய்தியாளர் காஹிலா