குவைத்தில் இந்திய சுதந்திர தின விழாவையொட்டி வாலிபால் போட்டி
குவைத் : குவைத் இந்திய முஸ்லிம் சங்கத்தின் ஒரு அங்கமான ஐக்கிய வாலிபால் அமைப்பின் சார்பில் இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி சல்மியா தோட்டத்தில் வாலிபால் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. இதில் குர்கா குக்ரி என்ற அணி சாம்பியன் பட்டத்தையும் இந்திய முஸ்லிம் சங்க குவைத் அணி ரன்னர் பட்டத்தையும் பெற்றது.வெற்றிக் கோப்பையை இந்திய முஸ்லிம் சங்க நிர்வாகி அகமது அலி சாஹேப் வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.- நமது செய்தியாளர் காஹிலா