பார்டர் என் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாக இருக்கும் - அருண் விஜய்
குற்றம் 23 படத்திற்கு பிறகு அறிவழகனும், அருண் விஜயும் இணைந்துள்ள படம் பார்டர். ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வெளியீட்டக்கு தயாராகி விட்டது. நவம்பர் 19ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் திருப்திகரமாக முடிந்தமைக்காக அருண் விஜய் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டவர்களுக்கு ஐ பேட் பரிசளித்துள்ளார்.
படம் குறித்து அருண் விஜய் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இது படத்தில் உங்கள் அற்புதமான பணிக்கான ஒரு அன்பின் அடையாளம். இந்த அற்புதமான கதையை என்னிடம் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநர் அறிவழகனுக்கு நன்றிகள். இந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்த ஆல் இன் பிக்சர்ஸுக்கும் நன்றி. பார்டர் என்னுடைய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும், என் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாகவும் இருக்கும். என்று எழுதியிருக்கிறார்.