மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1383 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1383 days ago
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரித்து ஓடிடியில் நவ., 2ல் வெளியான படம் ‛ஜெய் பீம்'. இப்படத்திற்கு பாராட்டுகள் ஒருபக்கம் கிடைத்தாலும் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தி காட்சிகள், குறியீடுகள் இருந்ததாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும், பா.ம.வினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சூர்யா உள்ளிட்ட படக்குழு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னையை தீர்க்க இயக்குனர் ஞானவேல் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், ஜோதிகா(தயாரிப்பாளர்) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
1383 days ago
1383 days ago