மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம்?
பாகுபலி படங்கள் மூலம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தவர் ராஜமவுலி. இந்த படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம். ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இப்படம் பாகுபலியை விட பலமடங்கு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் ராஜமவுலியின் அடுத்த ஹீரோ யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் இயக்குவதாக உறுதியான தகவல்கள் கசிந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுவாக ராஜமவுலி படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். நான் ஈ சுதீப், பாகுபலி ராணா என ஹீரோக்களே விரும்பி நடிப்பார்கள். அந்த வரிசையில் விக்ரமும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.