உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் திரைக்கு வரும் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோ

மீண்டும் திரைக்கு வரும் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோ

தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக அமைவது ரியாலிட்டி மற்றும் கேம் நிகழ்ச்சிகள் தான். அந்த வகையில் வித்தியாசமான கான்செப்ட்டுகளோடு விஜய் டிவி பல தரமான நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது. அந்த வகையில் முன்னதாக மூன்று சீசன்களாக வெளிவந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை.

இதில் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையர்களோடு கலந்து கொண்டு கேம் விளையாடுவர். இந்நிலையில், சீசன் 4-க்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. இம்முறை இந்நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்க உள்ளதாகவும், போட்டியாளர்களாக ரேகா கிருஷ்ணப்பா - கிருஷ்ணா, பரீனா - உபைத் ரஹ்மான், சிங்கப்பூர் தீபன் - சுகன்யா, ப்ரவீன் - ஐஸ்வர்யா, சித்து - ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !