செக் மோசடி வழக்கில் விமலுக்கு 300 ரூபாய் அபராதம்
ADDED : 1061 days ago
விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்த படத்தை தயாரிக்க விமல் கோபி என்பவரிடம் 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் காசோலை வழங்கி உள்ளார். அந்த காசோலை வங்கயில் பணம் இன்றி திரும்பி வந்தது. அதன் பின்னரும் விமல் கடனை திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால் கோபி செக்மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன் வரவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூபாய் 300 அபராதம் விதித்த நீதிமன்றம் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது.