ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு
ADDED : 877 days ago
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாக உள்ளது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் கே. ஜி. எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.
இத்திரைப்படம் ஜூனியர் என்டிஆர்-ன் 31வது படமாக உருவாகிறது .மைத்ரி மூவி மேக்கர்ஸ்,என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது என அறிவித்துள்ளனர்.