இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு!
ADDED : 656 days ago
ஹரஹர மாகதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கஜினிகாந்த், பொய் கால் குதிரை ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு 'தி பாய்ஸ்' என தலைப்பு வைத்துள்ளனர். இவருடன் இணைந்து இதில் சாரா, மொட்டை ராஜேந்திரன்,ரெட்டின் கிங்ஸ்லி, கலக்க போவது யாரு வினோத் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படம் 2024 பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.